1.50 கோடி நிதி .. வழங்குகிறார்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள்
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க எம்.பி.க்கள் சார்பில் ரூ1 கோடியே 50 லட்சம் நிதி வழங்கப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடு.உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். அங்கிருந்து வரும் தகவல்கள் நெஞ்சைஉருக்குகின்றன.
அ.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. ரத்தத்தை சேகரித்துகுஜராத்துக்கு அனுப்பவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
குஜாராத் நிவாரணத்திற்காக அ.தி.மு.க. நாடாளுமன்ற, மக்களவை, மாநிலங்களவைஉறுப்பினர்கள் 15 பேரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம்ஒதுக்கப்படும். இதன் படி ரூ 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாகஅளிக்கப்படும். முன்னரே ரூ 6 லட்சம் நிவாரண நிதியாக அனுப்பப்பட்டுள்ளது எனகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications