காஷ்மீரிகள் ரத்த தானம்
ஸ்ரீநகர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாமில், 85 பேர் ரத்ததானம் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில விடுதலை முன்னணியினர் ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விடுதலை முன்னணியின் மூத்த தலைவகள் ஜாவித் மிர், பாஷிர் பட்,யாக்கூப் பட் ஆகியோர் முதலில் ரத்த தானம் செய்து, ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தனர். பின்னர் விருப்பமுள்ளர்கள் ரத்ததானம் செய்தனர்.
பின்னர் ஜாவித் மிர் கூறுகையில், ரத்த தான முகாமில் 85 பேர் ரத்த தானம் செய்துள்ளோம். தானம் மூலம் கிடைத்த ரத்தத்தை இங்குள்ள மருத்துவமனையில்கொடுத்துள்ளோம். அங்கிருந்து ரத்தம் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநில ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை குஜராத் நிவாரண நிதிக்காகக் கொடுக்கிறார்கள். முதல்வர் பரூக் அப்துல்லா ரூஒரு கோடியை குஜராத் நிவாரண நிதிக்காக ஏற்கனவே அனுப்பி வைத்து விட்டார்.
இதுதவிர, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் மூத்த தலைவர் யாசீன், கட்சித் தொண்டர்கள் தானம் செய்த 80 பாயிண்டுகள் ரத்தம் வைக்கப்பட்டபாட்டில்களை புதன்கிழமை டெல்லிக்கு வந்து கொடுத்தார். அவர் கொண்டு வந்து கொடுத்துள்ள ரத்தம் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.