எரிமலை வெடித்ததா?
அகமதாபாத்:
குஜராத்தின் டோல்கா கிராமத்தில், பூகம்பம் ஏற்பட்ட தினத்தன்று எரிமலைக் குழம்பு போன்ற மண்வெளியேறியதால் கிராமத்து மக்கள், எரிமலைதான் வெடித்து விட்டதோ என்ற பீதியில் உள்ளனர்.
இங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் கிராமம் முழுவதும் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து, களிமண்ணும், சுடுநீரும், சேறுநிறைந்த வயல்களுமாகக் காட்சியளிப்பதால் இங்கு வாழும் மக்கள் இன்னும் பயத்திலேயே உள்ளனர்.
ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டபோது, அகமதாபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோல்காகிராமம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. பூகம்பத்தையடுத்து நிலத்திற்கு கீழே இருந்த வந்த சுடுநீரும், சேறும்கிராமத்தையே வெட்டவெளியாக்கி விட்டது.
பூகம்பம் ஏற்பட்டபோது, வெளியாகிய மண் குழம்பைப் பார்த்து, எரிமலைக் குழம்பு என கிராமத்து மக்கள்நினைத்தனர். பூகம்பத்தையடுத்து பூமிக்கு கீழே எரிமலை வெடித்து விட்டதோ என அவர்கள் பயந்தனர். ஆனால்,விஞ்ஞானி ஜே.ஆர். திரிவேதி கூறுகையில், பூகம்பத்தன்று வெளியானது எரிமலைக் குழம்பு அல்ல. அந்தப்பகுதியில் ஏற்கனவே சுடுநீர் படிவுகள் இருக்கின்றன. பூம்பத்தின்போது அவை வெளியே வந்துள்ளன என்றார்.
பூகம்பம் வந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை விஞ்ஞானிகள் யாரும் டோல்கா கிராமத்திற்குச்செல்லவில்லை. மேலும் இங்குள்ள கிராம மக்கள் அனைவரும் எந்த நேரத்திலும் நிலத்தடியிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியேறி கிராமம் முழுவதும் பரவலாம் என்ற பயத்தில் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications