வேறுபாடுகளை மறந்து ..
அகமதாபாத்:
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததையடுத்து, பூகம்பத்திலிருந்து தப்பியவர்கள் தங்களுக்குள் ஜாதி,மத, இன வேறுபாடுமின்றி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ரயில்வே நிலையத்தில் உள்ள, பார்வையற்றோர் சங்கம்தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து கொடுக்கிறது. பூகம்பத்தால் கால்களை இழந்தவர்களுக்கு, மூன்று சக்சரவாகனங்கள், வாக்கிங் ஸ்டிக் ஆகியவற்றைக் கொடுத்து உதவுகிறார்கள்.
பார்வையற்றோர் சங்க இயக்குநர் பூஷன் புனானி கூறுகையில், பொதுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக,பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து கொடுக்கிறோம். தற்போது அவசர உதவி தேவைப்படும் மக்களுக்கு,உடனடியாக உதவி செய்து வருகிறோம் என்றார்.
அகமதாபாத் ரயில்வே நிலையத்தில், போர்ட்டர்கள் சங்கத்தினர், கட்ச் மற்றும் பூஜ்ஜூக்குச் செல்லும் பலரிடம்உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தனுப்புகிறார்கள்.
போர்ட்டர்கள் சங்கத் தலைவர் காசிம் இமாம் பாஷா கூறுகையில், ரயில்வே நிலையங்களில் வேலை செய்யும்போர்ட்டர்கள் தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தாங்கள் சம்பாதிப்பதில் அவர்கள் ரூ 50 வசூல் செய்து 24மணிநேரமும் இயங்கும் சமைல் அறையை அமைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். அகமதாபாத்ரயில்வே நிலையத்தில் மொத்தம் 650 போர்ட்டர்கள் உள்ளனர் என்றார்.
ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் பள்ளி நடத்தும் ஏகலாவா கல்வி நிறுவன உறுப்பினர்கள், பூகம்பத்தால் வீடுகளைஇழந்த சிறுவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின்நலனிற்காக அவர்கள் குழந்தைகள் காப்பகம் ஒன்றை உடனடியாகத் திறந்தனர்.
இதுகுறித்து ஏகலாவா கல்வி நிறுவன பிரதிநிதி மோனா மல்கோத்ரா கூறுகையில் குழந்தைகள் காப்பகம் திறந்த 2மணி நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 10 குழந்தைகள் வந்து சேர்ந்துள்ளனர்.
எங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள், கூடாரங்கள்அமைப்பதற்கான பொருட்கள் ஆகியவற்றை வசூல் செய்து வருகிறார்கள். ஆனால் வீடுகள், உடைமைளைஇழந்தவர்கள் புதிய வீடுகள் கட்டவும், புதிய வேலையைத் தேடவும் ஏதாவது செய்ய வேண்டும் என்றுநினைக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.