2 மணி நேரத்தில் முடிந்த கடத்தல் நாடகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சிலரால் கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் 2 மணி நேரத்தில்மீட்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சென்னைையைச் சேர்ந்தவர் ராஜப்பா. நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரை, சிதம்பரம் என்பரது தலைமையிலான கும்பல்திங்கள் கிழமை கடத்தியது. அந்த கும்பல் துப்பாக்கி முனையில் ராஜப்பாவைகொடுமைப்படுத்தி மிரட்டியுள்ளது.
சிதம்பரத்திற்கும், ராஜப்பாவுக்கும் இடையே வியாபார விஷயத்தில் ஏற்பட்ட தகராறுகாரணமாக ராஜப்பா கடத்தப்பட்டார். ராஜப்பாவின் தம்பி தன் அண்ணன்கம்பெனியிலிருந்து திரும்பி வரவில்லை என கொடுத்த புகாரின் பேரில் சென்னைபோலீஸ் கமிஷ னர் காளிமுத்து தனி படை ஒன்றை அமைத்தார்.
தனிப்படை போலீசார் விரைந்து தேடி இரண்டு மணி நேரத்திற்குள் கடத்தல் கும்பலைபிடித்து, ராஜப்பாவை மீட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications