திருப்பூரில் அறிவுத் திருக்கோயில்
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானத் திருக்கோயில் அல்லது அறிவுத் திருக்கோயில்புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
வேதாத்திரி மகரிஷி சமூக சேவா சங்கம் சார்பில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. மனிதர்களுக்கிடையே,கடமையுணர்வு, ஒழுக்க உணர்வு, ஈகைக் குணம் ஆகியவற்றை மேம்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலுள்ள ஆழியாறு என்ற பகுதியில் ஓம்கார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமூக நலத்தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. இங்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பின்,தமிழகம் முழுவதிலும்உள்ள அறிவுக் கோவில்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கற்பிக்கும் சேவையில்அமர்த்தப்படுகின்றனர்.
தமிழகத்தின் 13-வது அறிவுத் திருக்கோயில் இது. முதல் கோவில் 1982-ம் ஆணடு ஆழியாறில் தொடங்கப்பட்டது.திருப்பூர் அறிவுக் கோவில் ரூ. 45 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உடற்பயிற்சி, தியானம், கல்விபோதனை மற்றும் பல பயிற்சிகள் தரப்படுகின்றன.
புதன்கிழமை திறக்கப்படும் திருப்பூர் அறிவுக் கோவில் திறப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தானம்தலைமையில் நடக்கிறது.