அமைச்சருக்கு ரத்தகசிவு
அகமதாபாத்:
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட சம்பவம் குறித்து பத்திரிக்கைக்கு செய்தி சேகரித்த இங்கிலாந்து முன்னாள் அமைச்சருமான லார்டு பில் என்பவருக்குமூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து முன்னாள் அமைச்சர் லார்டு பில் (வயது 88). இவர் தனிப்பட்ட முறையில் அகமதாபாத் வந்திருந்தார். அப்போது தான் அகமதாபாத்தில்பூகம்பம் ஏற்பட்டது.
அடுத்த நாள் பூகம்பம் குறித்த செய்திகளைத் இங்கிலாந்தில் உள்ள பத்திரிக்கைக்கு கொடுத்துக் கொண்டிருந்த போது இவருக்கு மூளையில் ரத்தக் கசிவுஏற்பட்டது. உடனடியாக அகமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை டாக்டர் துர்பாட் சட்ரபதி கூறுகையில், மூளையில் ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் லார்டுபில்லின் உடல் நிலை தற்போது தேறி வருகிறது.
அவரது உடலுக்கு கவலைப்படும்படி பிரச்சனைகள் எதுவும் இல்லை. சிலர் அவரை டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றுநினைக்கிறார்கள். ஆனால் அவருக்கு இங்கேயே அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரால் நன்கு பேச முடிகிறது. நடக்கவும்செய்கிறார்.
அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரைப் பார்த்தால் 88 வயது என்று கூறவே முடியாது. உடல் நலம் பெற்று வரும் அவர் விரைவில்லண்டன் செல்லலாம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications