For Daily Alerts
Just In
மீண்டும் தி.மு.க.ஆட்சியே .. ஸ்டாலின்
தஞ்சாவூர்:
மீண்டும் தி.மு.க. ஆட்சி கருணாநிதி தலைமையில் மலரும் என்று சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கும்பகோணம் புதிய மீன் மார்க்கெட் திறப்பு விழாவில்கூறினார்.
அங்கு அவர் பேசுகையில், விழாவிற்கு வரும் வழியில் மக்கள் அளித்த வரவேற்பை பார்த்த போது மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரும் என்பதுஉறுதியாகிறது.
தி.மு.க. பதவிக்காக அலையவில்லை. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக ஆட்சியில் அமர விரும்புகிறது.
கும்பகோணம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள்செயல்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து தமிழக மக்களுக்காக உழைத்திட தி.மு.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]