வளர்த்த மாடு முட்டி விவசாயி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பால் கறந்த மாடு எட்டி உதைத்ததில் கிணற்றில் விழுந்த ஒருவர் உயிரிழந்தார்.
செய்யாறு பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்ற விவசாயி வழக்கம் போல் தான் வளர்க்கும் பசு மாட்டிடம் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போதுஅந்த மாடு எட்டி உதைத்ததில் அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த கிணற்றில் விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications