கைவிடாத கதிரவன்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்படுத்தி பூமி சதி செய்தாலும், சூரியன் மக்களைக் கைவிடவில்லை.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோலார் குக்கர்கள் உணவுகளை சமைப்பதற்கு உதவுகின்றன. சோலார் குக்கர்களில் உணவு சமைப்பதற்குநல்ல சூரிய வெளிச்சம் இருந்தால் போதும். குஜராத் மாநிலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குசிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பரிசோதனை உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சோலார் குக்கர்களில் வெந்நீர் வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து இந்திய நிர்வாகத்துறைக் கழக வேளாண்துறை பேராசிரியர் கிரிஜா ஷரண் நிருபர்களிடம் கூறுகையில், குஜராத் பூகம்பத்தில் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டது கட்ச் மாவட்டம்தான். தற்போது கட்ச் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் செய்து கொடுக்கும் குழுவினர் 50 சேலார் பிரஷர்குக்கர்களை வைத்திருக்கிறார்கள். இன்னும் 500 குக்கர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தக் குக்கர்கள் மூலம் ஒரு நாளைக்கு இருமுறை 80 பேருக்கு உணவு சமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. பச்சாவ் நகரில் உள்ள ஆனந்த் கனிகாஉயர்நிலைப்பள்ளி இடிந்து விழுந்து விட்டதால் உடனடியாக அங்கு படித்துக் கொண்டிருந்த 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே கூடாரம்அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

நிவாரணப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவர், ஒரே சமயத்தில் 20 முதல் 30 வரை குக்கர்களில் சமையல் செய்யலாம். சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காது.பச்சாவ் - பூஜ் பகுதியில் பூகம்பத்தால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சோலார் குக்கரில் வெந்நீரும் வைத்து எடுத்துச் செல்லப்படுகிறதுஎன்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+