பா.ம.க. குறித்து மக்களுக்குக் கவலையில்லை
சேலம்:
அதிமுக அணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்துள்ளது குறித்து மக்கள்கவலைப்படவில்லை. அடுத்து வரப் போவது அதிமுகவா அல்லது திமுகவாஎன்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு என்று கருத்துத் தெரிவித்துள்ளார் மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சேலம் சென்றிருந்த வைகோ அங்கு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ம.க.வின் அணி மாற்றம் குறித்து அவரிடம்கேட்டபோது, இது நடந்திருக்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமான முடிவை டாக்டர்ராமதாஸ் எடுத்துள்ளார்.
ராமதாஸின் முடிவால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது.வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படாது. ஆனால் பா.ம.க.வுக்குத்தான் இதனால் பாதிப்புஏற்படும் வாய்ப்பு உள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.இருப்பினும், புதிதாக எந்தக் கட்சிகள் வந்தாலும் மகிழ்ச்சியே என்று கருணாநிதிகூறியுள்ளார். அதை மதிமுகவும் வரவேற்கிறது.












Click it and Unblock the Notifications