காங்கோ காட்டில் கடும் போர்

Subscribe to Oneindia Tamil

காங்கோ:

காங்கோவின் காட்டுப்பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற காங்கோ படைகளுக்கும், ஹூடு இனப் படையினருக்கும் இடையே கடுமையான போர் நடந்துவருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போரில் ருவாண்டா ராணுவத்திலிருந்து விலகிய ஹூடு ஆதரவு வீரர்கள், ஹூடு இனத்தை சேர்ந்த 5000 க்கும்மேற்பட்டோரை கொண்ட படையோடு, காங்கோ ஜனநாயக போராட்டக்குழு மோதி வருகிறது.

தற்போதைய சண்டையில் புருண்டியின் ஹூடு ஆதரவுப் படையும் சேர்ந்துள்ளதாகவும், இச்சண்டையில் இறந்தவர்கள் தகவல் பற்றி தகவல் இல்லை என்றும்காங்கோ ஜனநாயக போராட்டக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அவர்கள்

மேலும், சாபுன்டா நகர் மற்றும் அங்குள்ள விமானதளங்கள் எதிராளிகளின் தாக்குதலுக்குப் பின்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள்தெரிவித்தனர்.

இச்சண்டை பற்றி தென் கிவு மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவிக்கையில், போராளிகளுக்கு இடையிலான சண்டையில், விமான எதிர்ப்பு பீரங்கிகள், எந்திரதுப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன போராட்ட சாதனங்கள் உபயோகிக்கப்படுகிறது, என்றார்.

போராளிகளுக்கிடையேயான இந்தச் சண்டைக்கு காரணம் காங்கோ அதிபர் ஜோசப் கபிலாவின் ஆத்திரமூட்டும் பேச்சுகளே என்றுபோராளிக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+