வானிலிருந்து ஒரு "பல்டி .. உயிர் தப்பிய பெண்
கோலாலம்பூர்:
வானிலிருந்து குதிக்கும் போது பாராசூட் விரியாமல் இருந்ததால், உயிரிழந்து விடுவார் என்று கருதப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த பெண் 1.5கிலோமீட்டர் தொலைவிலிருந்து பூமியில் விழுந்தும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மலேசியாவிலுள்ள கோலாலம்பூரைச் சேர்ந்தவர் டாங்க் (27). இவர் கடந்த பிப்ரவரி 4 ம் தேதி கோலாலம்பூர் விமான தளத்திலிருந்து பாரசூட் மூலம்விண்ணில் பறந்து அங்கிருந்து கீழே குதிக்க நினைத்தார்.
திட்டப்படி அவர் குதிக்க முயன்ற சமயத்தில் பாரசூட் விரியவில்லை. இதையடுத்து 1.5 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். ஆனால் லேசானகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து டாங்க் கூறுகையில், நான் உயிர்பிழைத்ததை என்னாலேயே நம்பவே முடியவில்லை. மேலிருந்து குதிக்கும் போது பாரசூட் விரியாமல் இருந்தும்நான் உயிர்பிழைத்து விட்டேன் என்பது எனது அதிர்ஷ்டம்தான்.
முதலில் மேலிருந்து குதிப்பதற்காக விமானத்தில் உள்ள இரும்புக் கம்பியை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். அங்கிருந்து குதிக்க முயன்றபோது பாரசூட் விரியவில்லை. மேலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மண்ணில் விழுந்தேன்.
கீழே விழுவதற்கு முன் எனது பயிற்சியாளர் பாரசூட்டை விரிக்குமாறு வாக்கி டாக்கி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு கூறினார். ஆனால் அதுமுடியாமல் போயிற்று.
நான் கீழே விழுந்த பின் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது. அதற்குப்பின் 3 மணி நேரங்களுக்குப்பின் எழுந்து பார்த்த போது நான்உயிர்பிழைத்து விட்டேன் என்று தெரிந்தது.
கடவுள் கண்டிப்பாக அனைத்து வல்லமையும் பெற்றவர். அவரது அருளால்தான் நான் பிழைத்தேன். இல்லாவிடில் சாதாரண மணற்பரப்பில் விழாவில்மிகவும் கோரமான பகுதியில் விழுந்திருந்தால் இந்நேரம் இறந்திருப்பேன் என்றார் டாங்க்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications