ஜம்மு-காஷ்மீரில் 26 ஆண்டுக்குப் பின் சீக்கிய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமேலவை துணைத் தலைவர் ஹார்பன் சிங் செவ்வாய்க்கிழமை கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1975 ம் ஆண்டுக்குப் பிறகு, 26 ஆண்டுகள் கழித்து பிறகு சீக்கியர் ஒருவர் கேபினட் அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கவர்னர் கிரிஷ்சந்திர சக்ஸேனா ஹார்பன் சிங்குக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஸ்ரீநகரையடுத்துள்ள மேஹ்ஜூன் நகரில் ஆறு சீக்கியர்கள், தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு இவர் கேபினட்அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழும் சீக்கிய இனத்தவர்களின் வற்புறுத்தலையடுத்து இவர் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.ஹார்பன் சிங்க்குடன், மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 15 கேபினட் அமைச்சர்களும் அடங்குவர்.

ஹர்பன் சிங் பதவியேற்றது குறித்து முதல்வர் பரூக் அப்துல்லா கூறுகையில், ஜம்மு - காஷ்மீரில் வாழும் சீக்கியர்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்தும்வகையில் இவர் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+