தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் செவ்வாய்க்கிழமை நடந்தபல்வேறு மோதல்களில் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஜம்முவிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் சூரன் ஆறு பாயும் இடத்தில் உள்ளது சூரன்கோட்டை. இங்கு அதிக அளவுதீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு உள்ளது. இங்கு போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 தீவிரவாதிகள், 2 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 9 பேரும் லஸ்கார் ஈ தொய்பா மற்றும் அல் பாதர் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புக்களைச்சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் ஹாமாஸ் குல் மற்றும் ஒஸாமா குல் என தெரிய வந்துள்ளது.

சபாபோரா பகுதியில் மத்திய புறக்காவல் படை போலீஸாரும், ரிசர்வ் போலீஸ் படையும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர் மாவட்டத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரமுல்லாவையடுத்துள்ள தார்ஸூ என்ற இடத்தில் போலீஸாருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ் ஒருவரும், அடையாளம் தெரியாத நபர் ஒருவரும்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாரமுல்லா மாவட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அதே பகுதியிலிருந்து அடாையளம் தெரியாத சிறுவனின் பிணம்கண்டெடுக்கப்பட்டது என்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+