பலவீனமாகி விட்டது திமுக .. இ.கம்யூ. கூறுகிறது
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறி விட்டதால் திமுக பலவீனமடைந்து விட்டது எனஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரும் எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன்பாண்டிச்சேரியில், செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிஉடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
மதவாத கூட்டணியிலிரூந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறி, மதசார்பற்ற கூட்டணியில்இணைந்தது வரவேற்கத்தக்கது.
தி.மு.க. வின் நிலை பலவீனமாக உள்ளது. அதனால் தான் அக்கட்சி தலைவர் கருணாநிதிதமிழ் மாநில காங்கிரசை தங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்து வருகிறார்.
பாண்டிச்சேரி மக்களின் வாழ்க்கை- பொருளாதார நிலை உயர பொது செயல்திட்டத்தின்கீழ் அமைச்சரைவையை அமைக்குமாறு மதச் சார்பற்ற கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்தும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications