தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சாலை மறியல் செய்தது தொடர்பாக புதன்கிழமை போலீஸாரால் தாக்கப்பட்ட தொண்டர்களை பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ்நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டியார்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப்பின்னணியில் இருப்பதாக பா.ம.க.தொண்டர்கள் 5 பேரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பா.ம.க.வினரை உடனடியாக விடுவிக்கக் கோரி பா.ம.க.வைச் சேர்ந்த பிற தொண்டர்கள், புதன்கிழமை சாலை மறியல்போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மூன்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசப்பட்டது. இதில் 5 பெண் தொண்டர்கள்காயமடைந்தனர். இரண்டு பேர் காயமடைந்த நிலையில் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராம்தாஸ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்த தொண்டர்களை சந்தித்து ஆறுதல்கூறினார். அதன் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் இந்த சம்பவத்திற்கு காரணம் தென் பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் ஹூசைன்தான். அவர்தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கட்சி தலைவர்கள் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ரஜினி ராய், முதல்வர் சண்முகம், ஐ.ஜி ஆகியோரிடம் புதன்கிழமை மாலைபேச்ச வார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சம்பவம் குறித்த பா.ம.க. தேசிய மனிதச உரிமை கழகத்திற்கும், பெண்கள் உரிமை கழகத்திற்கும் தந்தி அனுப்பஉள்ளது என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications