For Daily Alerts
Just In
சுவாமிக்கு பேட்டா தர தடை
சென்னை:
சாட்சி விசாரணைக்கான பயணப்படியை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கின் குறுக்கு விசாரணைக்கு ஆஜரானார் சுவாமி. இதற்கானபயணப்படியாக 7900 ரூபாய்வழங்க கோரியிருந்தார்.
அதனை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சுவாமிக்கு பயணப்படி அளிக்க உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதி மன்றம் இது குறித்து இரண்டு வாரகாலத்திற்குள் பதிலளிக்க சுவாமிக்கும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 14, 2001, 5:30 [IST]