பாண்டி.யில் பா.ம.க. சாலைமறியல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தானம்பாளையம் சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முயன்ற பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் உள்பட100 பேர் கொண்ட கும்பலை போலீஸார் மூன்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டியார்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் குடிசைகள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளது தொடர்பாக பா.ம.க. தொண்டர்கள் 5 பேரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட பா.ம.க.வினரை உடனடியாக விடுவிக்கக் கோரி பா.ம.க.வைச் சேர்ந்த பிற தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில்இறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மூன்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினோம். இதில் 5 பெண் தொண்டர்கள்காயமடைந்தனர். இரண்டு பேர் காயமடைந்த நிலையில் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலை மறியல் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications