காதலர்தினம் கொண்டாடியவர்கள் கைது - மலேசியாவில்
கோலாலம்பூர்:
முஸ்லீம் மதத்திற்கு விரோதமாக காதலர் தினத்தை பலவாறாக கொண்டாடிய 200 க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஜோடிகளை மலேசியாவின் இஸ்லாமியஅதிகாரிகள் கைது செய்தனர்.
காதலர்தினம், ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுவதால் அதனை முஸ்லீம்கள் ஏற்கக் கூடாது. அதனை மீறி காதலர் தினத்தன்று பலமுஸ்லீம்கள் ஜோடியாக பூங்கா, ஹோட்டல்கள் மற்றும் பல இடங்களில் உல்லாசமாக இருந்த போது பிடிபட்டனர்.
100 க்கும் மேற்பட்ட ஜோடிகள் தாங்கள் திருமணமானவர்கள் என நிரூபித்ததால் விடுவிக்கப்பட்டனர். 44 ஜோடிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுஇஸ்லாமிய மத நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருக்கிறார்கள். மற்றும் பலர் எச்சரித்து விடப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். எனினும், பெரும்பாலானவர்களுக்கு அபராதத்தொகை மட்டுமே விதிக்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications