தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள்தமிழ் மக்கள் தேசம், புதிய நீதிக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து சாதி கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு வரலாம் என்று கூறினார்கள்.
அவர்கள், தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சேர்வதில் தி.மு.க. நடுநிலையான முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து அ.தி.மு.க.வுடன் இணைந்ததும்பலமுறை முதல்வர் கருணாநிதி, த.மா.கா.வை தி.மு.க கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
சில பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், தி.மு.க வில் த.மா.கா வருவது குறித்து கருணாநிதி எந்த முடிவெடுத்தாலும் ஒத்துக் கொள்வதாகஅறிவித்தனர்.
மேலும் பா.ம.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது குறித்து கருணாநிதி பதட்டமில்லாமல் இருப்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள்பாராட்டு தெரிவித்தனர். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய பொதுக்குழுக் கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications