For Daily Alerts
Just In
டெல்லியில் ஆபரணக் கண்காட்சி
டெல்லி:
இந்திய கைவினைஞர்களின் கை வண்ணத்தில் உருவான ஆபரணங்களின் கண்காட்சி டெல்லியில் பிப்ரவரி 23 ம் தேதி தொடங்குகிறது.
ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூர், டெல்லி, சென்னை, மற்றும் கோல்கட்டா நகரக் கை வினைஞர்கள் பங்குபெறும் இக்கண்காட்சி 4 நாட்கள்நடைபெறும்.
இக் கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் அம்சங்களில் ஒன்றாக அலங்கார ஆபரண கடிகாரங்களும் இடம்பெற உள்ளன.
இதுபோன்ற கண்காட்சிகளை மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகர்களில் நடத்துவது பற்றி திட்டமிடப்பட்டு வருகிறது.
இத்தகவல்களை, இக்கண்காட்சியை நடத்தும் ஏ.என்.இசட். இன்டர்நேஷனல் டிரேட் அன் மார்கெட்டிங் அஸோஸியேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 18, 2001, 5:30 [IST]