முடிவற்ற தொடர்கதையாகும் மீனவர் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் பாம்பன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழனன்று பாம்பன் மீன்பிடிதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் முருகன் (34) என்ற மீனவர் படுகாயமடைந்தார்.
உடன் சென்ற மீனவர்கள் உதவியுடன் அவர் ராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இம்மாதிரி சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெனிபர் சந்திரன்.












Click it and Unblock the Notifications