சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார் மாறன்
கோவை:
சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் கூட்டாளி மாறன், கோவையிலிருந்து சேலம்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வீரப்பனின் புதிய கூட்டாளி எனவும், தமிழ்த் தீவிரவாதி என அழைக்கப்படும் மாறன், சிறுவாணி மலைப்பகுதியில்கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
எனவே மாறன், கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர்,தற்போது மாறன் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாறன் எப்போது எங்கு கைது செய்யப்பட்டார் என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவும் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
கோவை சிறுவாணி மலைப் பகுதியில் அதிரடிப்படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு மாறன் கைதுசெய்யப்பட்டதாகப் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், மாறன் உளவுப பிரிவு போலீசாரால் பெரம்பலூர்பகுதியில் கைது செய்யப்பட்டு கோவை கொண்டு வரப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிப்ரவரி 15ம் தேதி மாறன் கைது செய்யப்பட்டார் என போலீசார் அறிவித்துள்ளனர். இந்த கைதுகடந்த ஜனவரி மாத இறுதியிலேயே நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
மாறன் கைது செய்யப்பட்ட பின்னர், பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட புகைப் படத்தில் மாறனின் படத்தில்காமிரா பதிவு செய்துள்ள நாள் , கடந்த மாதத் தேதியை காட்டுகிறது. எனவே இந்தக் கைதில் புதிய சந்தேகங்கள்எழுந்துள்ளது.