பூகம்பத்திற்குப் பின் செயல்பட ஆரம்பித்த பள்ளிகள்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் குடியரசு தினத்தன்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள 600 ஆரம்பப் பள்ளிகள், 50நடுநிலைப் பள்ளிகள் ஆகியவை ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து செயல்படத் துவங்கியுள்ளன.
குஜராத் மாநில கல்வித்துறை, பாடப் புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் ஆகியவை அடங்கிய புத்தகப் பைகளை மாணவ, மாணவிகளுக்குக்கொடுத்தது.
இவைகள் தவிர கட்ச் மாவட்டத்தில் உள்ள 74 தனியார் பள்ளிகள் ஆங்காங்கே 687 கூடாரங்கள் அமைத்து செயல்படத் தொடங்கியுள்ளன. சில இடங்களில்வகுப்பறைகள் இல்லாமல் திறந்த வெளியிலேயே மாணவ, மாணவியர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படுகின்றன.
கட்ச் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கட்ச் மாவட்ட கல்வித்துறை அதிகாரி நயிஷதா மாக்வானா கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிறு சிறு கிராமங்களிலும்பள்ளிகள் மீண்டும் இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
யு.என்.ஐ.