For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 பேரை கொன்று மனநிலை சரியில்லாதவர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

பாங்காக்:

தாய்லாந்தில் மனநிலை சரியில்லாத நபர் தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

தலைநகர் பாங்காக்கில் உள்ள இவர்களது வீட்டில் 8 பேரின் சடலங்கள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தாய் போலீஸார் கூறுகையில், வங்கி ஊழியரான உதய் சான்கேஸ்டிகுல் என்பவருக்கு சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தது.இதையடுத்து அவரால் வங்கி வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க முடியவில்லை.

பல மருத்துவமனைகளில் காண்பித்தும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து உதய், சம்பவத்தன்று குடித்து விட்டு தன் மனைவியை துப்பாக்கியால்சுட்டுக் கொன்றார்.

பின்னர் தனது மூன்று குழந்தைகள், மாமனார், தனது மனைவியின் தம்பி மற்றும் தங்கை ஆகியோரையும் கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். இதுகுறித்து தாய் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X