ஆப்கான் அகதி முகாம் பாகிஸ்தானில் அமையுமா?
பெஷாவர்:
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான முகாமை பாகிஸ்தானில் அமைப்பது குறித்து விரைவில் முடிவு காணப்படும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. அதிகாரி,கென்ஸோ ஒஸிமா தெரிவித்தார்.
பெஷாவரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஜலோஸி என்னுமிடத்தில் உள்ள ஆப்கன் அகதிகளின் நிலையை பார்வையிட்டபின் நிருபர்களிடம் பேசிய ஒஸிமா,ஆப்கனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் உள்நாட்டுப்போர் மற்றும் தற்போது வறட்சியினால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களின் நிலைமைபரிதாபத்திற்குரியது. அவர்களை காப்பதற்காக பாகிஸ்தானில் மற்றொரு அகதி முகாம் அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் அரசு சிறந்த முறையில் ஆப்கன் அகதிகள் முகாமை பராமரித்து வருகிறது. மேலும் ஒரு முகாம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதுபற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால், பாகிஸ்தான் ஆலோசனைப்படி ஆப்கானிஸ்தானிற்குள்ளே அகதிகள் முகாம் அமைப்பதுபற்றி பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் ஏற்கனவே உள்ள அகதிமுகாம்களை நிர்வகிக்க சர்வதேச நிதியுதவி குறைவாக அளிக்கப்படுவதாலும், மேற்கொண்டு அகதிகள்வந்தால் பராமரிப்பது சிரமம் என கூறி ஐ.நா.வின் மற்றொரு முகாம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை பாகிஸ்தான் நிராகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications