எக்ஸ் ரே பயன்பாடு: கிரிக்கெட் வாரியத்திற்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் வயதை அறிய எக்ஸ் ரேயை பயன்படுத்துவதற்கு மும்பை பாபா அணுஆராய்ச்சி கழகத்தின் கருத்தரங்கு ஒன்றில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அணுக்கதிர்வீச்சின் அளவு மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் பேசிய இந்திய அணு சக்திஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் பார்த்தசாரதி பேசும்போது, மருத்துவ தேவைகளுக்காக அல்லாமல் மற்றகாரணங்களுக்காக எக்ஸ்-ரேயை பயன்படுத்துவது தவறு. இதுகுறித்து உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், இங்கிலாந்து மருத்துவக்குழுவின் பரிந்துரைப்படி அங்கு வாழும் குழந்தைகளுக்கு மருத்துவ காரணம்தவிர பிறவற்றிற்கு எக்ஸ்-ரேயை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் வயதை கண்டறிய இந்திய கிரிக்கெட் வாரியம், ரேடியாலஜிஸ்ட் ஒருவரை நியமித்துள்ளதாகதெரிகிறது. வயதை கண்டறிய எக்ஸ்-ரேயை பயன்படுத்த வாரியம் முடிவு செய்திருப்பது சரியல்ல என அவர்தெரிவித்தார்.

கருத்தரங்கை அணுசக்தி துறை தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் துவக்கி வைத்தார். கருத்தரங்கில் பேசிய பொதுசுகாதாரத்துறை மருத்துவர் டாக்டர்.ஜில் மேரா, எக்ஸ்-ரே சோதனையின் முடிவுகள் தீர்க்கமாக இருக்கிறதுஎன்பதற்காக அதனை மருத்துவ காரணங்கள் தவிர மற்றவற்றிற்குபயன்படுத்துவது சரியல்ல என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+