குஜராத்துக்கு பில்கேட்ஸ் 100 கோடி உதவி
கோல்கட்டா:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் மறுசீரமைப்பு பணிக்கு கம்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் பில் கேட்ஸ்100 கோடி ரூபாய் அளிக்க இருக்கிறார்.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் எய்ட்ஸ் ஒழிப்பு, சிசு மரணத்தடுப்பு போன்றதிட்டங்களுக்கு ஆண்டுதோறும் தாராளமாக நிதியுதவி செய்வது வழக்கம்.
தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க இருப்பதாககோல்கட்டாவில் நிருபர்களிடம் பேசிய இந்திய வர்த்தக சங்க பேரவையின் தலைவர் சிரயூ அமின்தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குஜராத்தின் மறுசீரமைப்பிற்கு தேவையான நிதியுதவிக்கு பஞ்சமில்லை.
வெளிநாட்டு நிதியுதவி, பல்வேறு நிறுவனங்கள் அளிப்பதாக கூறியுள்ள நிதியுதவி, மற்றும் மத்திய அரசின்வரிவருவாய் ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் மறுசீரமைப்பிற்கு தேவையான 25,000 கோடி ரூபாய் கிடைக்கும்.இதன் மூலம் பூகம்பம் பாதித்த குஜராத்தை சீரமைக்க முடியும் என்றார்.
யு.என்.ஐ.