சிபி - சிஐடி ... சிபி - சிஐடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தர்மபுரி மாவட்டத்தில் இந்து அற நிலையத் துறையின் உதவி கமிஷனர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.

திங்கள்கிழமையன்று இந்து அறநிலையத் துறையின் உதவி கமிஷனர் அன்புமணி சிலரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைசெய்யுமாறு உத்தரவிட்ட முதல்வர், சிபி-சிஐடி தனது விசாரணை அறிக்கையை 1 வார காலத்திற்குள் சமர்பிக்கும். குற்றம் செய்தவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதுகுறித்து அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில் மாநில தகவல்தொடர்பு துறை அமைச்சர் முல்லை வேந்தனின் ஆதரவாளர்தான் என்னை தாக்கினர்.

அவர்கள் செவ்வாய்க்கிழமை கோவில் நிலங்களை குத்தகை விடுவதற்காக டென்டர் விடப்படவிருந்தது. அதை அவர்கள் ஒத்தி போடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் ஒப்புக் கொள்ளததால் அவர்கள் என்னை தாக்கினர் என கூறினார்.

பஞ்சவர்ணம் கொலை - சிபி-சிஐடி விசாரணை:

சென்னையில் பெண்கள் போராட்ட குழுவின் உறுப்பினர் பஞ்சவர்ணம் கொலை தொடர்பாக சிபி-சிஐடி விசாரணைக்கு முதல்வர் ஏற்கனவேஉத்தரவிட்டிருந்தார். இப்போது அன்புமணி தாக்கப்பட்டது தொடர்பாக சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்போதெல்லாம் முக்கிய வழக்குகளை சிபி- சிஐடி வசம் ஒப்படைக்கிறது தமிழக அரசு. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+