ஜில்லென்று ஒரு தண்டனை!
கோவை:
அதிக விலைக்கு ஐஸ்கிரீம் விற்ற ஹோட்டல் உரிமையாளர், வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோவைநுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை, காந்திபுரத்தில் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஹோட்டல் உள்ளது. இங்கு இளம்மொழியன், வேடியப்பன் ஆகியோர் 3 ஐஸ்கிரீம் பேக் வாங்கினர்.இதற்கான பில்லாக ஐஸ்கிரீம் ஒன்றிற்கு ரூ. 14 வசூலிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஐஸ்கிரீமின் அதிக பட்ச விலை ரூ.11 மட்டுமே. எனவே கூடுதல் விலைக்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்ததை எதிர்த்து கோவை நுகர்வோர்நீதிமன்றத்தில் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சண்முகம், அதிக விலைக்கு ஐஸ்கிரீமை விற்பனை செய்த தலப்ப, வேடியப்பனுக்கும் வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
அதோடு, வழக்கு நடத்தியதற்கான செலவு தொகையாக ரூ. 2 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.