காடுகளில் பதுங்கும் இலங்கைத் தமிழர்கள்
ராமேஸ்வரம்:
இலங்கையின் மன்னார் பகுதியில் ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தமிழர்கள் பலர் காடுகளில் வாழ்ந்து வருவதாக ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்தஅகதிகள் தெரிவிக்கின்றனர்.
வியாழனன்று தனுஷ்கோடி வந்த அகதிகள் நிருபர்களிடம் தெரிவித்த போது, இலங்கை விமானங்கள் குடியிருப்பு பகுதியில் குண்டுவீசித் தாக்கியதால் பலர்உயிரிழந்தனர். அவர்களை புதைக்க கூட யாரும் முன்வரவில்லை. உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டாலும், ராணுவத்தினரின் துன்புறுத்தலாலும் பலர்காடுகளில், கிடைப்பதை உண்டு அங்கேயே மறைந்து வாழ்கின்றனர்.
அங்கிருந்து தப்பித்து தமிழகம் வந்த தலைமன்னாரை சேர்ந்தவர்களை இலங்கை கடற்படை பிடித்து துன்புறுத்தியுள்ளது. தப்பிவரும் அகதிகளை விடுதலைப்புலிகளபிடித்தால் புலிகள் இயக்கத்திற்கு இளைஞர்களை இழுத்து செல்கின்றனர்.
இலங்கை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர் அங்கிருந்து தப்பி வர படகு கிடைக்காமல் கடற்கரையில் காத்து கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications