பாக்.-ஜிகாதிகள் பிரச்சினை தீர்ந்தது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

காஷ்மீர் போராளிகள் அமைப்பான ஜிகாத்திற்கும் பாகிஸ்தான் அரசுக்குமிடையேயான கருத்து வேறுபாடு நீங்கியது.

பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஜிகாத்திற்காக (புனித போருக்காக) பாகிஸ்தான் மக்களிடமிருந்து அதிரடியாக நன்கொடைவசூலிப்பதையும், பாகிஸ்தானிற்குள் ஆயுதங்களுடன் திரிவதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனால் ஜிகாத் அமைப்பு தலைவர்களுக்கும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், ஜிகாத்அமைப்பினர், பாகிஸ்தானின் சட்டதிட்டங்களை மதிப்பதாகவும், இனிமேல் சட்ட ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்து கொள்வதாகவும்உறுதியளித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குமுன் அவர்கள் சந்திக்க உள்ள சூழ்நிலை குறித்தும் யோசிக்கவேண்டும்.

ஆப்கனின் தலிபன்கள் வடக்கு மாகாண போராட்டத்திற்காக பாகிஸ்தானியர்களை அழைத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், முஸ்லீம் மதத்திற்கு எதிரானது எனக்கூறி அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டால் பாகிஸ்தானை மதவாத நாடாக கருதவேவழிவகுக்கும் என கவலை தெரிவித்தார்.

இதனிடையே, காஷ்மீர் போராளிக்குழுக்கள் கூறுவது போல் அவர்களுடைய புனிதப்போரை பாகிஸ்தானியர் அனைவரும் ஆதரிப்பதாக கூறுவதை மறுத்தபாகிஸ்தானிய அறிஞரான டாக்டர் முபாரக், சிந்து, பலுசிஸ்தானம் போன்ற பகுதிகளில் அவர்களுக்கு ஆதரவில்லை. மேலும், பாகிஸ்தான் அரசின்காஷ்மீர் பற்றிய வெளியுறவுக் கொள்கையால் காஷ்மீர் மக்கள் தங்களின் போராட்டத்தில் பாகிஸ்தான் அரசு தேவையற்று தலையிடுவதாககருதுகின்றனர் என்றார்.

இதனை ஆமோதித்த பத்திரிகைத்துறை பேராசிரியர் மேதி ஹசன், ஜிகாத் என்ற போர்வையில் தலைவர்கள் பலர் ஆடம்பரமாக இருக்க ஏழைசிறுவர்கள்பலர் போராட்டக்களத்தில் உயிர் துறக்கின்றனர் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+