பொதுமக்கள் கல்வீச்சில் 5 போலீசார் காயம்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

சிதம்பரத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீச்சுநடத்தப்பட்டது. இதில் போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் உட்பட 5 போலீசார்காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம். சிதம்பரத்திற்கு அருகே இருக்கும் சிவபுரி கிராமத்தில் இருக்கும்நஞ்சை நிலங்களை 50 மாடுகள் மேயந்து சேதப்படுத்தின. இதனால் கோபமடைந்தஅந்த பகுதி மக்கள் 10 மாடுகளை அடைத்து வைத்தனர்.

இந்த மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை மீட்டுத் தருமாறு போலீசாரிடம்கேட்டுக் கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகையன் தலைமையிலானபோலீசார் மாடுகளை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாகபோலீசாருக்கும். மாடுகளை அடைத்து வைத்தவர்களுக்கும் இடையே தகராறுஏற்பட்டது.

மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதும், சிதம்பரம் உதவி போலீஸ் தலைமைகண்காணிப்பாளர் பழனிக்கு தகவல் தரப்பட்டது. அவர் வந்தபோது போலீசார் மீதுபொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கும்பலைகலைத்தனர்.

கல்வீச்சில் பழனி உள்ளிட்ட 5 போலீசார் காயமடைந்தனர். இவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

போலீசார் தடியடி நடத்தியதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் கிடைத்த சிதம்பரம் உதவி மாவட்ட ஆட்சி தலைவர்வெங்கடாசலம் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில்ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன். தமிழரசன், பிச்சைபிள்ளை ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+