தமிழகத்திலிருந்து குஜராத்துக்கு ரூ 32 கோடி
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ 32 கோடி வசூலித்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள்,தொழிற்சாலை ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள், திரைப்படத் துறையினர், அரசியல்வாதிகள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் இதுவரை ரூ 32, 21,20,401 அளித்துள்ளனர்.
தமிழக அரசு, பிரதமரிடம் ரூ 5 கோடியை கொடுத்துள்ளது. மீதமுள்ள பணமும் விரைவில் ஒப்படைக்கப்படும்.
இது தவிர தமிழக அரசு ரூ 4.14 கோடி மதிப்புள்ள படுக்கைகள், போர்வைகளையும் குஜராத்திற்கு அனுப்பிவைத்துள்ளது தமிழக அரசு.
நிதி வசூல் புதன்கிழமை முடிவடைவதால் நிதி உதவி செய்ய விரும்புவோர், நிதி உதவி சேகரித்து வைத்துள்ளோர்அதை தமிழக அரசின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்முதல்வர் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications