பெண் சப்-இன்ஸ்பெக்டரைக் கிண்டலடித்த டாக்டர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டரை கேலியும் கிண்டலும் செய்த டாக்டர் உள்பட 3 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குத்தொடரப்பட்டள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதாதேவி, மற்றும் சில போலீசாார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குகை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த டாக்டர் மோகன் வெங்கடாச்சலம் (28), நடேஷ்ராஜ் (22), குகை பஜாரைச் சேர்ந்த நாகமணிக்கம்(23), ஆகியோர் சேலம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பெண் சப் இன்ஸ்பெக்டர் கீதாதேவி அந்தப் பக்கம் ரோந்து சுற்றியபோது கேலி செய்து கமெண்ட் அடித்துள்ளனர்.
இதைக் கேட்ட கீதா தேவி போலீசாரின் உதவியுடன் 3 வாலிபர்களையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications