இங்கிலாந்துக்குப் புலிகள் கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்து அதற்கு இங்கிலாந்து அரசு விதித்துள்ள தடைக்கு புலிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
மேலும் நார்வேயின் ஓஸ்லோ அமைதி முயற்சியைத் தொடருவோம் என்று கூறியுள்ளனர்.
லண்டனில், புலிகள் இயக்கம் சர்வதேச இயக்கம் என்ற அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் புலிகள் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் சார்பில்கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் அமைதி ஏற்படுத்த முயற்சி எடுத்து வரும் நார்வே நாட்டுக்கு, விடுதலைப்புலிகள் ஒத்துழைப்பு கொடுக்கும். இங்கிலாந்து அறிவித்தது போல்நாங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினர் அல்ல.
இங்கிலாந்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மேலும் இங்கிலாந்தின் இந்த அறிவிப்பால்எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி நார்வேயின் அமைதி முயற்சியில் பிரச்சனை ஏற்படும்.
மேலும் இங்கிலாந்து இவ்வாறு கூறியிருப்பது இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதிக்கும். புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றுகாரணம் காட்டி இலங்கை அரசால் துன்புறுத்தப்பட்டு வரும் தமிழர்கள் மிகவும் பாதிப்படைவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்தின் புதிய தீவிரவாதிகள் தடை சட்டம் 2000 ன் படி 21 தீவிரவாதிகள் இயக்கங்களை சர்வதேச தீவிரவாதிகள் இயக்கம் எனஅறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் புலிகளின் பெயரும் இருப்பதால் புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இந்தத் தீர்மானம் சர்வதேச தீவிரவாத செயல்களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர அந்நாடு முயற்சிக்கிறது என்பதையேகாட்டுகிறது.
புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரூ புதன்கிழமை அறிவித்தார். மேலும்விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இங்கிலாந்து உள்பட வேறு சில நாடுகளுக்கும் பயமுறுத்தல்கள் இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.
இது தவிர, இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்தாலும் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே எடுத்து வரும் முயற்சிக்குஇங்கிலாந்து ஆதரவளிக்கும். மேலும் இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வளவு விரைவில் முடியுமோஅவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, புலிகள் கூறுகையில், எங்கள் இயக்கத்துக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது, இலங்கை அரசை ஊக்குவது போன்றதாகும். மேலும்அவர்கள் இதனால் சமரச பேச்சுவார்த்தைக்கு வர காலம் கடத்துவார்கள். இதனால் இறுதியில் இலங்கையில் மேலும், மேலும் தீவிரவாதம்தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications