இங்கிலாந்துக்குப் புலிகள் கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்து அதற்கு இங்கிலாந்து அரசு விதித்துள்ள தடைக்கு புலிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
மேலும் நார்வேயின் ஓஸ்லோ அமைதி முயற்சியைத் தொடருவோம் என்று கூறியுள்ளனர்.
லண்டனில், புலிகள் இயக்கம் சர்வதேச இயக்கம் என்ற அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் புலிகள் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் சார்பில்கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் அமைதி ஏற்படுத்த முயற்சி எடுத்து வரும் நார்வே நாட்டுக்கு, விடுதலைப்புலிகள் ஒத்துழைப்பு கொடுக்கும். இங்கிலாந்து அறிவித்தது போல்நாங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினர் அல்ல.
இங்கிலாந்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மேலும் இங்கிலாந்தின் இந்த அறிவிப்பால்எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி நார்வேயின் அமைதி முயற்சியில் பிரச்சனை ஏற்படும்.
மேலும் இங்கிலாந்து இவ்வாறு கூறியிருப்பது இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதிக்கும். புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றுகாரணம் காட்டி இலங்கை அரசால் துன்புறுத்தப்பட்டு வரும் தமிழர்கள் மிகவும் பாதிப்படைவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்தின் புதிய தீவிரவாதிகள் தடை சட்டம் 2000 ன் படி 21 தீவிரவாதிகள் இயக்கங்களை சர்வதேச தீவிரவாதிகள் இயக்கம் எனஅறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் புலிகளின் பெயரும் இருப்பதால் புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இந்தத் தீர்மானம் சர்வதேச தீவிரவாத செயல்களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர அந்நாடு முயற்சிக்கிறது என்பதையேகாட்டுகிறது.
புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரூ புதன்கிழமை அறிவித்தார். மேலும்விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இங்கிலாந்து உள்பட வேறு சில நாடுகளுக்கும் பயமுறுத்தல்கள் இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.
இது தவிர, இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்தாலும் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே எடுத்து வரும் முயற்சிக்குஇங்கிலாந்து ஆதரவளிக்கும். மேலும் இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வளவு விரைவில் முடியுமோஅவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, புலிகள் கூறுகையில், எங்கள் இயக்கத்துக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது, இலங்கை அரசை ஊக்குவது போன்றதாகும். மேலும்அவர்கள் இதனால் சமரச பேச்சுவார்த்தைக்கு வர காலம் கடத்துவார்கள். இதனால் இறுதியில் இலங்கையில் மேலும், மேலும் தீவிரவாதம்தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications