கோவையில் திருப்பதி தேவஸ்தான தகவல் மையம்
கோவை:
திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு இந்த மையம், தேவையானதகவல்களை அளிக்கும்.
கோவையிலிருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஓவ்வொரு ஆண்டும் அதிகரி த்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோவையிலிருந்துதிருப்பதிக்கு புதிய ரயில் விடப்பட்டுள்ளது. இப்போது இங்குள்ள பக்தர்களுக்குச் சேவையை அதிகப்படுத்த திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் தேவஸ்தானம்திறக்கப்பட்டுள்ளது. கோவை பங்குச் சந்தை வளாகத்தில் இந்த மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் நிர்வாக அதிகாரி கிருஷ்ணய்யர் கூறியதாவது:
கோவையில் துவங்கப்பட்டுள்ள தேவஸ்தான தகவல் மையத்தில் பக்தர்களின் வசதிக்காக அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்திலிருந்து தரிசன முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு ஆகியவற்றை பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே தகவல் மையம் உள்ளது. இப்போது கோவையில் துவங்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள மையத்தில் நல்ல வருமானம் ஈட்டி வருகிறோம். தமிழக அறநிலையத்துறையால், இதனைக் கோயிலாக கருத முடியவில்லை. எனவேவருமானப் பிரச்னை இல்லை என்றார்.
விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் பேசுகையில், கடந்த பிப்ரவரி மாதம், கோவையைப் பொறுத்த வரை மிக முக்கியத்துவம் வாய்ந்தமாதமாக இருந்தது.
பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், முரளிமனோகர் ஜோஷி, இவர்களையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி, அதற்குப் பின்ஆளுநர் பாத்திமா பீவி என அடுத்தடுத்து ஒரே மாதத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் கோவையில் நடந்தது. மாத இறுதியான பிப்.28 ல், திருப்பதிவெங்கடாசலபதியும் வந்து விட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications