மீண்டும் ஆகாஷ் ஏவுகணை ஏவியது இந்தியா
புவனேஸ்வர்:
பல்வேறு இலக்குகளை தாக்கக் கூடிய தரையிலிருந்து விண்ணில் பாயும் ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா நான்கு நாட்களுக்குள் சோதித்து பார்த்துள்ளது.
ஒரிஸ்ஸாவின் சந்திப்பூர் கடல் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானத்தை இலக்காக கொண்டு ஏவப்பட்ட இந்த ஏவகணைக கடந்தஓராண்டிற்குள் மட்டும் மூன்றாவது முறையாக சோதிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 25 கி.மீ தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணைகள் 55 கிலோவரையிலான வெடிபொருட்களை ஏந்திச் செல்லக் கூடியவை.
இரண்டு கட்ட என்ஜின்களை கொண்ட ஆகாஷ் 18000 மீட்டர் உயரத்திலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடியவை. இவற்றில்பயன்படுத்தப்படும் ராஜேந்திரா என்ற ராடார் சாதனம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.
கடந்த சோதனைகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டு ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புஆராய்ந்து வருகிறது.
அக்னி-2 போன்ற ஏவுகணைகளின் சோதனை வெற்றியடைந்த போதும் தனுஷ், திரிசூல், கப்பற்படை உபயோகத்திற்கான பிருத்வி போன்றவற்றைமேம்படுத்துவதில் இந்த அமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.