இங்கிலாந்தில் புலிகளுக்குத் தடை: இந்தியா தான் காரணம்
கொழும்பு:
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில், விடுதலைப் புலிகளின் பெயரையும் இங்கிலாந்து அறிவிப்பதற்குக் காரணமாகஇருந்த இந்தியாவுக்கு, இலங்கை நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை விடுதலைப்புலிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இயக்கத்தை சர்வதேச தீவிரவாத இயக்கம்என்று அறிவித்தது இங்கிலாந்து. அத்துடன் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடையும் விதித்தது.
இதையடுத்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் அளித்த பேட்டியில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் பலமுறை, இங்கிலாந்திடம் வலியுறுத்தினார்.
இதனால், இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிப்பதற்கு இந்தியாவும் ஒரு காரணம். அதனால்இந்தியாவுக்கு, இலங்கையும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
இங்கிலாந்து, புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளதால் அவர்களுக்கு இலங்கை அரசு எப்போதும் தலைவணங்கும். நான் லண்டன் சென்று இங்கிலாந்து அரசுக்கு நன்றி கூறப் போவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள்வந்துள்ளன. அது வெறும் வதந்தி.
புலிகள் விஷயத்தில், இங்கிலாந்து நடுநிலையான, நியாயமான முடிவை எடுத்துள்ளது.
இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது, இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரியவெற்றியாகும் என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும், இலங்கையில் வாழும் சிங்களர்களும், தமிழர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுமிகப்பெரிய வெற்றி என்று யாரும் கருதி விடக் கூடாது. இங்கிலாந்து அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குஎதிராகச் செயல்பட வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. தமிழர்கள் யாரும் கலவரமடையத்தேவையில்லை.
மேலும், நார்வே தூதுக் குழுவினரின் ஒத்துழைப்பின் பேரில், இலங்கையில் அமைதி ஏற்படவிடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.