குஜராத் மீட்புப்பணி: தலித்துக்கள் மீது பாரபட்சமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் தலித்களும், சிறுபான்மையினரும் பாரபட்சமாய் நடத்தப்படுவதாககூறப்படுவதை காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மறுத்துள்ளார்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜாராத்திற்கு சென்று மீட்பு பொருள்களை வழங்கி விட்டு திரும்பியுள்ளார். அவர்நிருபர்களிடம் கூறுகையில், நான் அங்கு பல பகுதிகளுக்கும் சென்றேன். ஆனால் மீட்பு பணிகளில் தலித்களும், சிறுபான்மையினரும் பாரபட்சமாகநடத்தப்படுவதை பார்க்கவில்லை.

சோனியா காந்தி சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறியுள்ளது, அரசியில் சம்பந்தப்பட்டது. அது குறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை.

தலிபான் அரசு 2,000 ஆண்டு பழமையான புத்தர் சிலையை இடிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பல ஆயிரகணக்கான ஆண்டுகளாக இறைவனின் உருவ வழிபாடு நடந்து வருகிறது. நமக்கு அருகில் இருக்கும்நாடுகளில் இது போன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

காஞ்டி சங்கர மடம் குஜராத்தில் பள்ளி ஒன்றும் அனாதை ஆசிரமும் கட்ட உள்ளது. இதற்கான செலவில் காஞ்சி மடம் 50 சதவிகிதம் செலவை ஏற்றுக்கொள்ளும். மீதமுள்ள செலவை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு சங்கராச்சாரியார் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+