சன் டி.வி ரூ 5.15 கோடி பூகம்ப நிவாரண நிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி., குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ 5.15 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர்கருணாநிதியிடம் வழங்கியது.
குஜராத்தில் ஜனவரி மாதம் 26-ம் தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கனோர் இறந்து போனார்கள். பலலட்சக்கணக்கானோர் வீடு உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள்.
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனியார் தொலைக் காட்சி நிறுவனமான சன் டி.வி. நேயர்களிடமிருந்து நிவாரண நிதி திரட்டியது. இதன் மூலம்கிடைத்த ரூ 5.15 கோடிக்கான காசோலையை சன் டி.வி.வின் நிறுவன இயக்குநர் கலாநிதி மாறன் முதல்வர் கருனணாநிதியிடம் கொடுத்தார்.
காசோலையை பெற்றுக்கொண்ட கருணாநிதி, காலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications