கோவை காதல் ஜோடி திருப்பதியில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
கோயம்புத்தூர் கோயில் மேடைச் சேர்ந்த காதலர்கள் திருப்பதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த சங்கர் என்கிற அகுட்டி சங்கர் (30) என்பவர் தன் 26 வயது காதலியுடன் புதன்கிழமைதிருப்பதியில் இருக்கும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். வெள்ளிக்கிழமை காலை பார்த்த போது இருவரும் இறந்து கிடந்தனர்.
இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இவர்கள்இறந்தது குறித்த தகவல் லாட்ஜில் அவர்கள் கொடுத்த விலாசத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications