இந்திய பரதநாட்டிய கலைஞருக்கு பிரான்சில் கெளரவம்
பாரிஸ்:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ ஏற்பாடு செய்துள்ள கலை விழாவில் இந்திய பரத நாட்டிய கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி கெளரவிக்கப்படஇருக்கிறார்.
வியாழக்கிழமை மாலை நடக்கவிருக்கும் நிகழ்சிசியில் யுனெஸ்கோவின் துணை இயக்குனர் ஜெனரல் மெளனிர் புசேனாகி யாமினி கிருஷ்ணமூர்த்தியைகெளரவிக்கிறார். இந்த விழா பாரிசில் இருக்கும் யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடை பெறும்.
இந்த கலை விழாவை யுனெஸ்கோ, பாரிசில் இருக்கும் இந்திய பாரம்பரிய இசையை மேம்படுத்தும் அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.
இந்த விழா யாமினி கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யையான மரியா கிரணின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் துவங்கும். இதையடுத்து பாரிசில் இருக்கும் கதகளி கலைஞர்ஷர்மிளா ஷர்மாவின் கதகளி நடனம் நடைபெறும்.இவர் புகழ் பெற்ற கதகளி நாட்டிய கலைஞர் பிஜூ மகராஜின் சிஷ்யை.
இதற்குப் பின் கர்நாடக வாய்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு பக்க வாத்தயங்களாக கமலா கான்ட்யாவின் வயலினையும், ரவி தர்மராஜாவின்மிருதங்கமும், தீபா ரெமி தம்புராவயும் இசைப்பார்கள்.
அன்றைய நிகழ்ச்சி யாமினி கிருஷ்ணமூர்த்தியின் பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் நிறைவடையும்.
ஐ.ஏ.என்.எஸ்.