For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆந்திராவில் 7 காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டிக் கொலை
ஹைதராபத:
ஆந்திர மாநிலத்தில் 7 காங்கிரஸ் தொண்டர்களை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் ரவுடிகள் வெட்டிக் கொன்றனர். மேலும் 4காங்கிரஸ் தொண்டர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குண்டூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. 11 காங்கிரஸ தொண்டர்களும் துர்கி என்ற இடத்துக்குசென்று கொண்டிருந்தபோது அவர்களை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழி மறித்து கத்தி, கோடாரிகளால் மிகக்கொடுமையாகத் தாக்கினர்.
இதில 7 பேர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஆளும் கட்சியினரின் இந்த கொடூரச் செயல் ஆந்திராவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
Comments
Story first published: Saturday, March 10, 2001, 5:30 [IST]