தலையில் தேங்காய் உடைத்து பேரணியை துவக்கும் குரும்பர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

"பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து ஒரு காரியத்தை துவக்குவார்கள், ஆனால்,குரும்பர்கள் தலையில் தேங்காய் உடைத்து சென்னையில் ஒரு பேரணியைத்துவக்குகின்றனர்.

அரசியல் கோலாகலம் அரங்கேறும் இந்த நேரத்தில் சென்னையில் ""மார்ச் பாஸ்ட்பேரணிகள் அதிகமாகத் தான் நடக்கப் போகின்றன. அரசியல் கட்சிகளை விட, சாதிச்சங்கங்களும், தொழிற்சங்கங்களும், சிற்றியக்கங்களும் தான் அதிகமாகப் பேரணிநடத்தப் போகின்றன.

இதில் தன் பங்கிற்கு குரும்பர் சங்கம் இடம் பெறுகிறது. இதில் தலையில் தேங்காய்உடைத்து வித்தியசாமான முறையில் பேரணியைத் துவக்குகின்றனர்.

இதற்காக குளித்தலை மேட்டுமகநாதபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோயில் பூசாரி 10நாட்கள் விரதமிருந்து வருகிறார். இவர் சென்னையில் நடக்கும் குரும்பர் சங்கப்பேரணியை, 10 பேர் தலையில் தேங்காய் உடைத்துத் துவக்கி வைக்கிறார்.

இந்த பேரணி முடிவில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், கர்நாடகா முன்னாள் முதல்வர்கிருஷ்ணப்பா கலந்து கொள்கிறார். தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி,பன்னீர் செல்வம் ஆகியோரும் கலந்து கொள்வர்.

பேரணி முடிவில், குரும்பர்களை பழங்குடியினமாக அறிவிக்க வேண்டும்.தடையில்லாமல் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

அரசியலில் உரிய பங்களிக்க வேண்டும். ஆடு வளர்ப்போருக்கு தனிவாரியம்உருவாக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்பநிதி வழங்க வேண்டும்போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+