தி.மு.க.கூட்டணியில் இணைகிறார் ப.சிதம்பரம்
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான மயிலாப்பூர் தொகுதி த.மா.கா.எம்.எல்.ஏ.ரங்கநாதன் சென்னை மேயர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வரும் ஸ்டாலினை சந்தித்த ரங்கநாதன் சீட் பேரம் குறித்து பேசியிருப்பார்என கருதப்படுகிறது. த.மா.கா.ஜனநாயக பேரவை என்ற அமைப்பை துவக்கியுள்ள சிதம்பரம் சனிக்கிழமையன்றுமாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார். இதன் மூலம் திமுக கூட்டணியில் சிதம்பரம் இணைவார்என தெரிகிறது.
முன்னதாக, சென்னையில் எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனுடன், தொகுதிப் பங்கீடு தொடர்பாகசனிக்கிழமை ஆலோசனை நடத்தியபின் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திமுக கூட்டணிக்குத் தேர்தலில் ஆதரவு தர ப.சிதம்பரம் முன்வந்திருப்பதாகஅறிந்தேன். அது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் எங்களது கூட்டணியில் சேர முன்வந்தால் வரவேற்பேன்
மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது.பேச்சுவார்த்தையில்சிக்கல் ஏதும் இல்லை. இழுபறியும் இல்லை.
வைகோ ஊரில் இல்லை. நாளையோ அல்லது நாளை மறுநாளோ அவர் சென்னை வருகிறார். அவர் வந்தவுடன்பேசி முடிவு செய்யப்படும்.
திமுக கூட்டணியில், பாரதீய ஜனதாக் கட்சிக்கும், மதிமுகவுக்கும் இடையே 2-வது இடத்திற்குப் போட்டி நடப்பதாககூறப்படுவது குறித்து எனக்குத் தெரியாது. அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நடந்தால்உங்களுக்குச் (செய்தியாளர்கள்) சொல்கிறேன்.
ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிந்து விடும் என்றார்கருணாநிதி.