குரான் எரிப்பு: வாஜ்பாய், அத்வானி மீது புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் சில நாட்களுக்கு முன் குரான் எரிக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.கவைஇந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (எஸ்.ஐ.எம்.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.

கான்பூரில் நடந்த மத கலவரங்களில் இந்த எஸ்.ஐ.எம்.ஐ. அமைப்புக்குதொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் டெல்லியிலும்அம்ரிஸ்தரிலும் குரான் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பா.ஜ.க. மீது இந்தஅமைப்பு கடும் பதில் குற்றம் சாட்டியுள்ளது.

குரான் எரிப்பை பிரதமர் வாஜ்பாயும், உள்துறை அமைசர் அத்வானியும்ஊக்குவித்ததாக இந்த அமைப்பு கூறுகிறது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஐ.எம்.ஐ-ன் பொதுச் செயலாளர்சஃப்தார் நகோரி கூறியதாவது:

மார்ச் 5-ம் தேதி குரான் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனபிறகும் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பிரதமர் வாஜ்பாய்.கூறினார். இதன் மூலம் அரசு அந்த விஷயத்தை மூடி மறைக்க முயல்கிறது என்பதுதெளிவாகிறது.

வாஜ்பாயும், அத்வானியும் இது போன்ற சம்பவங்களை ஊக்குவிக்கின்றனர். அந்தசம்பவங்களை மூடி மறைக்க முயல்கின்றனர். இந்த விஷயத்திற்கு இரு தலைவர்களும்பொறுப்பேற்க வேண்டும்.

குரான் எரிப்பில் தொடர்புடைய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.

தலிபான் அரசு புத்தர் சிலையை இடித்த விவகாரத்தில் உருவ வழிபாடு பற்றிமுழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் பின்பே புத்தர் சிலை உடைப்புசரியா, தவறா என முடிவு செய்யப்பட வேண்டும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+