ஆயுதப் பேர ஊழலால் வெற்றிவாய்ப்பு பாதிப்பா?: திமுக சர்வே
சென்னை:
ஆயுதப் பேர ஊழலால் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தமிழகபோலீசார் ரகசிய சர்வே எடுத்துள்ளனர்.
உளவுத்துறையினர் இந்த சர்வேயை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் சமர்பித்துள்ளனர்.
தெஹல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழல், தமிழகத் தேர்தலில் எந்த அளவு பாதிப்பைஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய்வதற்காக உளவுத்துறையின் உதவியை கருணாநிதி நாடியதாகக் தெரிகிறது.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள டவுன் பஞ்சாயத்துக்கள், கிராமங்கள் என பலஇடங்களில் சர்வே நடத்தியது உளவுத்துறை.
படித்தவர்கள், ஆண்கள், பெண்கள், கிராமவாசிகள், படிக்காதவர்கள் அனைவரிடமும் ஆயுதப் பேர ஊ ழல் தமிழகதேர்தலைப் பாதிக்குமா என்று கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த சர்வே தமிழக முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications