தமிழக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக தேர்தல்பிரசாரம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இருப்பினும், பல கட்சித் தொண்டர்கள், சுவர்களில் விளம்பரங்கள் எழுதுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது எனபிஸியாக இருக்கிறார்கள்.
சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவர்கள் கண்ணில் படும்படியாக சுவரொட்டிகள் ஒட்டிவருகின்றனர் பல கட்சிகளின் தொண்டர்கள்.
சென்னையில் எங்கு நோக்கிலும் திமுக வின் உதயசூரியன், அதிமுக வின் இரட்டை இலை, மதிமுகவின் பம்பரம்,பாமக வின் மாம்பழம், தமாகா வின் சைக்கிள் சின்னங்களாகக் காட்சியளிக்கின்றன.
தங்கள் கட்சி சின்னங்களுக்குக் கீழே பொதுமக்களைக் கவரும் வகையில் நல்ல வாசகங்களையும் எழுதிவைத்துள்ளனர் சம்பந்தப்பட்ட கட்சி ஆதரவாளர்கள்.
சன் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் திமுக தேர்தல் வாசகங்களை சுவர்களில்எழுதப்பட்டுள்ளது. நாங்கள் நல்லாட்சியைத் தர ரெடி, நீங்க ரெடியா? என்ற ரீதியில் வாசகங்கள் சுவர்களில்எழுதப்பட்டுள்ளன.
அதிமுக வினரோ, திமுக ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை. வீரப்பன் நாடகத்தில்என்ன நடக்கிறது என்ற வகையில் சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.
சில கட்சித் தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைவர்களின் புகைப்படத்தை வரைந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள்கட்சியின் சின்னத்தை வரைந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என்று தேர்தல்ஆணையம் உத்தரவு பிற்பித்தும் பல சுவர்களை சுவர் விளம்பரங்கள் அலங்கரிக்கின்றன என்றே கூறலாம்.
யு.என்.ஐ.